ஊக்கமருந்து சோதனையில் மாட்டிய டூட்டி சந்த்

Reading Time: < 1 minute

இந்திய ஓட்டப்பந்தய வீராங்கனை டூட்டி சந்த், தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை நடத்திய ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்ததாக கூறப்படுகிறது.

Dutee chand

இந்தியாவின் முன்னணி ஓட்டப்பந்தய வீராங்கனை டூட்டி சந்த் தடைசெய்யப்பட்ட பொருளைப் பயன்படுத்தியதற்காக சோதனை உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து ஜனவரி 18 ம் தேதி (புதன்கிழமை) இடைநீக்கம் செய்யப்பட்டார். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் டூட்டிக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

டூட்டியின் டெஸ்ட் மாதிரிகளில் காணப்படும் தடைசெய்யப்பட்ட பொருட்கள் சார்ஸ் எஸ் 4 ஆண்டரின், ஓ டெஃபெனிலாண்டரின், எஸ்ஏஆர்எம்எஸ் (என்போசார்ம்) (ஓஸ்டாரின்) மற்றும் லிகாண்ட்ரோல் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

WADA website-ன் தடைசெய்யப்பட்ட பொருட்களின் பட்டியலின்படி, இந்த ஊக்கமருந்து எடுத்துகொள்வதால் விளையாட்டில் அதிக வேகம் கிடைக்கும் என்றும், WADA வெப்சைட்டில் இந்த பொருட்கள் தடைசெய்யப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊக்கமருந்து பரிசோதனையை எதிர்த்து வீராங்கனை டூட்டி சந்த் மேல்முறையீடு செய்துள்ளார். பரிசோதனை அறிக்கை போலி என்றும் அவர் விமர்சித்துள்ளார். உலக ஊக்க மருந்து தடுப்பு முகமையின் அறிவிப்பு தனக்கு வரவில்லை என்று கூறிய டூட்டி சந்த், தான் நீண்ட காலமாக சர்வதேச அளவில் போட்டியிடுவதாகவும், தடை செய்யப்பட்ட பொருளை பயன்படுத்தியதில்லை என்றும் கூறினார்.

Leave a Reply

WP Radio
WP Radio
OFFLINE LIVE
%d