”மாண்டஸ்” புயல் – ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை

Reading Time: < 1 minutes

”மாண்டஸ் புயல் வலுவடைந்து வட தமிழ்நாடு – புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரை நோக்கி நகரும்.” – வானிலை ஆய்வு மையம் தகவல்

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று மாலை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து என்று இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார். மேலும் தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று மாலை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெற்று தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ளது.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென் கிழக்கே 770 கி.மீ தொலைவில் உள்ளது. மணிக்கு 15 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை புயலாக மாற வாய்ப்பு உள்ளது. புதிய புயலுக்கு மாண்டஸ் எனப்பெயரிடப்பட்டுள்ளது.

இன்று மாலை புயல் சின்னமாக வலுவடைந்து வட தமிழ்நாடு – புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரை நோக்கி நகரும். தமிழக கடலோர பகுதிகளில் டிசம்பர் 8 முதல் 10-ம் தேதி வரை மணிக்கு 50 கி.மீ முதல் 70 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.

புயல் காரணமாக கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் டிசம்பர் 8ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், திருவள்ளூர், ராணிபேட்டை, வேலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய இடங்களில் டிசம்பர் 9ம் தேதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிபேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், தர்மபுரி, கிருஸ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 10 ம் தேதி கன மழை பெய்யும் என்று ஆரஞ்ச் அலர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 3 துறைமுகங்களில் 4, 5ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், நாகை துறைமுகத்தில் 4 மற்றும் 5ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Leave a Reply

WP Radio
WP Radio
OFFLINE LIVE
%d bloggers like this: